நாமக்கல்: கடுமையான சூழலிலும் சாதிக்கும் மாணவர்கள் நமது நாட்டில் அதிகம் இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சி.பி.எஸ்.சி. பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவியுடன் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது கனிகாவுக்கு பிரதமர் வாழ்த்து கூறினார். மேலும், நாமக்கல் மாவட்டம் என்றால் மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோவில் தான் நினைவுக்கு வரும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இனி மாணவி கனிகாவின் பெயரும் நினைவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று தேர்வுகளில் சாதித்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.