ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களை 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்ததால் தொற்று சமூக பரவலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றானது அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னையில் கொரோனாவின் பாதிப்பு குறைந்தாலும் கூட, மற்ற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் அரக்கோணத்தில் கொரோனாவின் தாக்கம் வேகமாகி பரவி தற்போது மாவட்டத்திலேயே சற்று கூடுதலாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.