ஆலந்தூர்: மூதாட்டி வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து ரகளையில் ஈடுபட்ட ஏபிவிபி தேசிய தலைவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி விஜயராகவன் என்பவர், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நங்கநல்லூர் ராம் நகர் 3வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் எனது வயதான சித்தி வசித்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் பாஜகவின் ஏபிவிபி மாணவர் அமைப்பின் தேசிய தலைவரும், அரசு மருத்துவமனை புற்று நோய் பிரிவு மருத்துவருமான சுப்பையாவும் வசித்து வருகிறார். இவர், தனது காரை தரைதளத்தில் நிறுத்துவதற்கு எனது சித்தியிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு எனது சித்தி, வாடகை செலுத்திவிட்டு காரை நிறுத்திக்கொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சுப்பையா, கடந்த சில நாட்களாக வயதானவர் என்றும் பார்க்காமல், எனது சித்திக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.