திருப்புவனம்: கீழடி அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் தோண்டிய வட்டவடிவ சிறிய துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கதிரேசன், சேதுராமு ஆகியோரது நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் நடக்கின்றன. இதில் ஒரு குழியில் நேற்று சிறிய வகை மண் பாத்திரங்கள் கண்டறியப்பட்டன. மற்றொரு குழியில் வளைவான செங்கல் கட்டுமானம் இருந்தது. அதன் அருகிலேயே 6 அடி ஆழத்தில் வளைவான அமைப்பில் 6 சிறிய வட்ட வடிவ துளைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த துளைகளின் பயன்பாடு குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வசிப்பிடங்கள் பெரும்பாலும் வட்ட வடிவில் அமைந்திருக்கின்றன.