பாபர் மசூதி இடிப்பு வழக்கு: லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் அத்வானி ஆஜர்

லக்னோ: லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் அத்வானி ஆஜரானார். பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்து காணொலி காட்சி வாயிலாக வாக்குமூலத்தை அத்வானி பதிவு செய்து வருகிறார்.  பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி நேற்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அத்வானியிடம் நீதிபதி எஸ்.கே.யாதவ் வாக்குமூலம் பெற்று வருகிறார். ஆக.31க்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தினசரி விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: