டெல்லி : ஓபிசி கிரீமி லேயர் விதிகளை மாற்ற பாஜக எம்பிக்கள் இடையே கருத்து வேறுபாடு எதிரொலியாக புதிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்துள்ளது. ஓபிசி கிரீமி லேயர் பிரிவினருக்கான தகுதியை நிர்ணயிப்பதில் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை உட்படுத்தி அதை திருத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பிற்படுத்தப்பட்டோருக்கு ஆண்டு வருவாய் ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் பெற்றவர்களின் ஒட்டுமொத்த வருவாயுடன் சேர்த்து கணக்கிட்டால், பல தகுதியுள்ள ஒபிசியினரை மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அரசுப் பணிகளை பெற முடியாமல் செய்துவிடும்.