கந்த சஷ்டி கவசத்தை மிக கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தியுள்ளனர் : ரஜினிகாந்த் ட்வீட்

சென்னை : கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி ஈனச் செயலில் ஈடுபட்டவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், முருக பக்தர்கள் மனம் புண்படும்படியான வீடியோக்களை நீக்கிய தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவித்தார். மேலும் எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்றும் ரஜினி ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: