சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,717-க்கும், சவரன் ரூ.37,736-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 60.10-க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் அதிகப்படியான நாட்களில் உயர்ந்தும், சில நாட்களில் மட்டும் குறைந்தது. ஊரடங்கால் பல பகுதிகளில் நகைக்கடை மூடப்பட்டிருந்தும் தங்கம் விலை உயர்ந்து வந்தது. கடந்த மாதம் 24 ஆம் தேதி தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. சவரன் ரூ.37,272-க்கு விற்கப்பட்டது. இது தங்கம் வரலாற்றில் அதிகபட்சமான விலையாகும். கொரோனா பாதிப்பு நேரத்தில் தங்கம் விலை அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது நாள்தோறும் முந்தைய விலை சாதனையை முறியடித்து வருகிறது.
சர்வதேச அளவில் கொரோனா பரவலால் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் வரவு குறைந்து, விலை உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவும் ஒரு காரணம். அதில் முதலீடு செய்தவர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தற்போது ஆர்வம் காட்டுவதாலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.