பெரம்பூர்: குற்ற செயலில் ஈடுபட தடையாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னையில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் அந்தந்த காவல் நிலைய போலீசார் மூலம் அதிக அளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன்மூலம் ரவுடிகள் மற்றும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் அதிக அளவில் கைதாகினர். இதனால் சில இடங்களில் சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர். பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் திருடப்பட்டுள்ளன. இதேபோல், வியாசர்பாடி நேரு நகர் 3வது தெரு குட்செட் பகுதியில் உள்ள 3 சிசிடிவி கேமராக்களை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர்.