மானாமதுரை: மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் எஸ்டபிள்யூ திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஆழ்துளை கிணற்றை ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் ஆய்வுக்குப்பின் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் குழாய் கிணறு, துளைகிணறு, நீர்பாசனக்குழாய், நீர்தேக்க தொட்டி உள்ளிட்டவைகளுடன் இணைந்து நுண்ணீர் பாசனம் செய்ய மானியம் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் 87 விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்து பணிகள் நடந்து வருகிறது.