வாஷிங்டன்: அமெரிக்க மக்களை கட்டாயமாக ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது என்று அதிபர் டிரம்ப் தடாலடியாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 38.33 லட்சம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 17.7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 1.42 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசும், அரசியல் தலைவர்களும் மக்களை கட்டாயமாக மாஸ்க் அணியும்படி உத்தரவிட வேண்டுமென அமெரிக்காவின் முன்னணி தொற்று நோயியல் வல்லுநரான அந்தோணி ஃபவுசி வலியுறுத்தியுள்ளார்.