பெரியார் சிலை அவமதிப்பு ராகுல் கண்டிப்பு

புதுடெல்லி:  கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.  கோவை சுந்தராபுரம் பஸ் நிறுத்தத்தில் பெரியார் சிலை உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இதன் மீது காவி சாயம் பூசப்பட்டு இருந்தது. இதை கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இச்சம்பவம் பற்றி டிவிட்டரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தமிழில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘எவ்வளவு மிகப்பெரிய வெறுப்பாக இருந்தாலும், ஒரு மகத்தான தலைவரை கண்டிப்பாக களங்கப்படுத்த முடியாது,’ என கூறியுள்ளார்.

Related Stories: