சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கில் கோவில்பட்டி சிறையில் சிபிஐ விசாரணை

மதுரை: சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கில் கோவில்பட்டி சிறையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ அதிகாரி வி.கே.சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சிறையில் இருந்தபோது உடனிருந்த கைதிகளிடம் விசாரணை நடத்துகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை, காவலர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: