திருமலை: ஆந்திரா முழுவதிலும் உள்ள 13 ஆயிரம் கிராமங்களில் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க விரைவில் ஒய்எஸ்ஆர் கிராம கிளினிக் தொடங்கப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்தார். ஆந்திர மாநிலம், தாடேப்பள்ளி முகாம் அலுவலகத்தில் இருந்து ஆரோக்கிய திட்டத்தின் கீழ் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்தை 6 மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெகன்மோகன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘மருத்துவ செலவுக்காக யார் ஒருவரும் கடனாளி ஆகிவிடக் கூடாது என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.