டெல்லி: சர்வதேச அரங்கில் இந்தியா தமது வலிமையையும் மரியாதையும் இழந்து வருகிறது என்று மத்திய பாஜக அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார். சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்ட செய்தியில்,ஈரானில் இருக்கும் சாபஹார் துறை முகத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் ஷாஹேடன் பகுதிக்கு இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியா உடன் ஈரான் 4 ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கொண்டது. ஆனால் இந்திய தரப்பிலிருந்து நிதி அளிப்பதில் தாமதமாகி வருவதால், இந்தத் திட்டத்தை ஈரானே நிறைவேற்றிக் கொள்ள உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.