பெங்களூரு: கொரோனா பாதித்து குணமானவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றை குணப்படுத்த இதுவரை தனியாக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக, கொரோனா நோயாளிகளுக்கு கூட்டு மருந்து சிகிச்சையே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சைக்கு நல்ல பலன் இருந்தாலும், இதைவிட பிளாஸ்மா சிகிச்சை சிறந்த பலனை தந்து வருவது மருத்துவரீதியாக நிரூபணமாகி வருகிறது. இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா தானம் தரும் நபர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று கர்நாடகா மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இதனால் பிளாஸ்மா தானம் செய்ய விரும்புவர்கள் தாமாக முன் வருவார்கள் என நம்பிக்கை உள்ளது.