சென்னை: சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முரளிதரராவ் முன்னிலையில் வீரப்பனின் மகள் வித்யா ராணி கட்சியில் இணைந்தார். சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் முத்துலட்சுமி தம்பதிக்கு விஜயலட்சுமி, வித்யாராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.