திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கக் கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்று என்ஐஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியதாக, தூதரக மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் கைதானார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிகாரி சொப்னா சுரேஷை கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று முன்தினம் பெங்களூருவில் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தீப் நாயமாநில தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) துறை முன்னாள் ஊழியரும் கைது செய்யப்பட்ட னர். இவர்கள் 3 பேர் மட்டுமின்றி எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகிய 4 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.