இன்று முதல் 6 நாட்களுக்கு கொரோனா மருத்துவ முகாம்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு கொரோனா பரவலை தடுக்க இலவச மருத்துவ முகாம் நடக்க உள்ளது. அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் 18ம் தேதி வரை இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும், மக்களும் பயன்பெறும் வகையில் நடத்தப்பட உள்ளது. இந்த மருத்துவ முகாமினை அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், அச்சிறுப்பாக்கம் கோயில் நகரம் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இன்று அச்சிறுப்பாக்கம் லூப்ரோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், நாளை மலை நகர் அங்கன்வாடி கட்டத்திலும், 15ம் தேதி ஜிஎஸ்டி ரோடு ஐயப்பன் கோயில் பகுதி, 16ம் தேதி பயணியர் மாளிகை அருகில், 17ம் தேதி களக்காடி சாலை அய்யனார் கோயில் பகுதி, 18ம் தேதி லூப்சாலை சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் நடைபெறகிறது. எனவே, இந்த மருத்துவ முகாம்களை அந்தந்த பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: