மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு கொரோனா பரவலை தடுக்க இலவச மருத்துவ முகாம் நடக்க உள்ளது. அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் 18ம் தேதி வரை இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும், மக்களும் பயன்பெறும் வகையில் நடத்தப்பட உள்ளது. இந்த மருத்துவ முகாமினை அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், அச்சிறுப்பாக்கம் கோயில் நகரம் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.