ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் நர்ஸ்கள் வீட்டிற்கு செல்ல முடியாது என்பதால், மருத்துவமனையிலேயே உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு தரமின்றி இருப்பதாக கூறப்படுகிறது. இதை சாப்பிட்ட செவிலியர்கள் சில தினங்களுக்கு முன் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி, செவிலியர்களுக்கு விரோதமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.