சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடை திறந்து, மூடும் நேரத்தில் பல்வேறு துறை அரசு அதிகாரிகளின் தலையீடு உள்ளது.வாழ்வாதாரம் தொலைந்து நிலை குலைந்துள்ள வணிகர்கள் மீது அபராத விதிப்பும், கடை திறப்பு நேரத்தைக் குறைத்தும், சில இடங்களில் குறிப்பாக சென்னையில் கடையைப் பூட்டி காவல்துறை அதிகாரிகள் சாவியை கையிலெடுத்துச் சென்றதும் மிகவும் வேதனைக்குரிய செய்தியாக உள்ளது. தமிழக முதல்வர் அறிவிப்புகள் வெளியிட்டு இனியும் ஊரடங்கு அமல்படுத்த முடியாது. அனைவரின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.