சீர்காழி: சீர்காழி அருகே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தனிமைப்படுத்த அழைத்து செல்ல வந்த சுகாதாரத்துறையினர், அவரை தொடுவதற்கு தயங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆரஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சயாவனம், சளி காய்ச்சல் மற்றும் இருமலுக்கு சிகிச்சை பெற சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்ததை அடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.