சென்னை : அச்சமின்றி வாழ எங்களுக்கு இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் அதன்படி பிரதமர் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்கொள்வோம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சீன விவகாரத்தில் மத்திய அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். அவ்வப்போது ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசுக்கு கேள்விகளையும் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்.