கோவை :கோவையில் மூலிகை மைசூர்பாக் மூலமாக கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக விளம்பரம் செய்த இனிப்புக் கடையை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த கடைக்கு சீல் வைத்துள்ளனர். கோவை மாவட்டம் தொட்டிப் பாளையத்தில் இயங்கி வரும் லாலா இனிப்புக் கடை ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமானது. இந்த கடையில் தயாரிக்கப்படும் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகி வருவதாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் சின்னியம்பாளையம், ஆர்ச்சிப்புதூர் ஆகிய பகுதிகளில் கொரோனா அறிகுறி இருந்தவர்களுக்கு இலவசமாக மூலிகை மைசூர்பா அளித்ததாகவும் அதன் மூலம் அவர்கள் குணமாகி வந்ததாக ஸ்ரீராம் கூறியிருந்தார்.