மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட சுற்று வட்டார வனப்பகுதிகளில் கரடி, காட்டுயானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, கடமான், புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை வனவிலங்குகள் உள்ளன. கடந்த 6 மாதத்தில் 13 யானைகள் கோவை மாவட்டம் போளுவாம்பட்டி முதல் சிறுமுகை வரை உள்ள வனப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.