பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செழியன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அத்திமாஞ்சேரிபேட்டை மருத்துவமனையில் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் பள்ளிப்பட்டு பேரூராட்சி பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி வந்தார். இவருக்கு திடீரென்று வேறு ஒரு இடத்திற்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டது. இதனால், கிராம மக்கள், “பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செழியனை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்களுக்கும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வெள்ளை பேப்பரில் கையெழுத்திட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை மற்றும் கோனேட்டம்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: