பெங்களூரு: தமிழகத்தில் இருந்து செல்பவர்களை மாநில எல்லையில் கர்நாடக போலீசார் தடியடி நடத்தி விரட்டியடிப்பதால் பதற்றம் நிலவுகிறது. கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இருமாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார் அனைத்து வாகனங்களையும் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இ - பாஸ் வைத்திருந்தாலும் கர்நாடகத்தில் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், விளக்கம் கேட்கும் பொதுமக்களை போலீஸ் தடியடி நடத்தி விரட்டியடிப்பதால் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது.