நாமக்கல் ராசிபுரம் அருகே ஏ.டி.எம் மையத்திற்கு தீவைப்பு: ரூ.6 லட்சம் பணம் எரிந்து சாம்பல்!!!

நாமக்கல்:  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஏ.டி.எம் ஒன்றில் பணத்தை கொள்ளையடிக்கமுடியாத ஆத்திரத்தில் கொள்ளையர்கள் ஏ.டி.எம் மையத்திற்கு தீவைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.  இதில் ஏ.டி.எம் மையத்தில் வைக்கப்பட்ட ரூ.6 லட்சம் பணம் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த தனியார் கல்லூரி ஒன்றில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் இன்று அதிகாலை கொள்ளையடிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது. அதாவது, அதிகாலை 3 மணி அளவில் ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், இயந்திரத்தை உடைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயாததால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் இயந்திரம் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும், இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் பணமும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து, புதுசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த ஏ.டி.எம்-மில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு, தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: