பெர்கமோ: கொரோனா கொள்ளை நோய் பாதித்து இத்தாலியில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது. சீனாவுக்கு அடுத்ததாக கொரோனா தொற்று வேகமாக பரவிய இத்தாலியில் தற்போது பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் முன்னேறிய நாடான இத்தாலியில் 34,700 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெர்கமோ என்ற இடத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா, முன்னிலையில் நினைவிடத்தில் பூங்கொத்து வைத்து துக்கம் அனுசரிக்கப்பட்டது. பெர்கமோ நகர மேயர் மற்றும் முக்கிய பிரமுர்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொற்று பாதித்து உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.