தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே ஆற்றின் கரையை பலப்படுத்த புதிதாக கட்டிய தடுப்பு சுவரில் விரிசல் விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் வீரசோழன் ஆற்றில் மேட்டூர் அணை தண்ணீர் வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் கரையை பலப்படுத்த ஆற்றின் பக்கவாட்டில் பொதுப்பணித் துறையினரால் புதிதாக கட்டப்பட்ட சுவற்றில் விரிசல்கள் இருப்பதை கண்டு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தீவிரமாக நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு காவிரி நீர்ப்பாசன வசதிக்காக கடந்த 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது கடைமடை பகுதிகளுக்கு வந்துள்ளது.