சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நெப்பத்தூரில் அரசு அனுமதி பெற்ற தனியார் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் சிதம்பரத்தை சேர்ந்த கிருஷ்ணன் சவுடுமண் எடுத்து விற்பனை செய்து வருகிறார். இக்குவாரியில் மண் எடுப்பதால் சுற்றியுள்ள வீடுகளுக்குள் புழுதி மண் புகுவதாகவும் நிலத்தடி நீர், விவசாய பணி பாதிக்கப்படுவதாகவும், உப்பு நீராக மாறுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.