திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் தலைவர் சுஜாதா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில், துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமு லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் கே.திராவிடபக்தன் வெங்கத்தூர் ஊராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், பாமக ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன் கூவம் ஆற்றின் குறுக்கே பட்டறை கிராமத்தில் தடுப்பணை கட்ட வேண்டும், வெங்கத்தூர் ஊராட்சியில் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ய கோரியும், கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தொழிற்சாலைகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 50 சதவிகிதம் வேலை வழங்கக் கோரியும், கோசாலை அமைக்க கோரியும் பேசினர்.