காஞ்சிபுரம்: கைத்தறி நெசவாளர்களுக்கான ஊரடங்கு கால நிவாரணத் தொகை பெற, நாளைக்குள் ( 30ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டா் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை.
காஞ்சிபுரம் சரகத்தில் கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத, இலவச 200 யூனிட் மின்சாரம் பயன்பெறும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரணத்தொகை தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.1,34,74,000 விடுவிக்கப்பட்டு கடந்த 20ம் தேதி வரவு வைத்து சில வழிகாட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க அறிவுறுத்தப்பட்டது.