சென்னை: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசும்போது,‘‘ 40 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியை கண்டித்த காங்கிரசுடன் இணைந்து திமுக ஜனநாயகம் பேசுவது வியப்பாக உள்ளது. எமர்ஜென்சியை கொண்டு வந்து பல தலைவர்களை சிறையில் அடைத்தது காங்கிரஸ்’’ என்று பொங்கியுள்ளார். அந்த நிகழ்வுக்காக இந்திராகாந்தி மன்னிப்பு கேட்ட பின்பு தான் இணைந்தோம். ஆனால் 1998ல் கூட்டணியாக போட்டியிட்ட அதிமுக, நீண்ட இழுபறிக்கு பின் மதிமுக, பாமக ஆதரவு கடிதம் கொடுத்த பின்பு தானே கடிதம் தந்தது. அது கூட பரவாயில்லை. 13 மாதத்திலேயே பாஜ ஆட்சியை ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்கடித்தது.