மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெரியதண்டா கிராமம் உள்ளது. தமிழக-கர்நாடக வனப்பகுதிகள் சந்திக்கும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இந்த கிராமம் உள்ளது. இங்குள்ள பச்சைப்பாலி ஓடை என்ற இடத்தில், கடந்த 3 நாட்களாக 6 வயது மதிக்கதக்க ஆண் யானை உடல் மெலிந்து நடக்க முடியாமல் விழுந்து கிடந்தது.