காஞ்சிபுரம்: வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை வேலை இணையம் தொடங்கப்படுவதாக, காஞ்சி கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை. அனைத்து மாவட்ட வேலைநாடுநர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்குரிய பொருத்தமான வேலைகளை தேர்வு செய்யவும், வேலை அளிப்பவர்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தனியார் துறை வேலை இணையம் எனும் புதிய இலவச இணையம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.