செங்கல்பட்டு: காங்கிரஸ் கட்சி சார்பில், லடாக் எல்லையில் இறந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, செங்கல்பட்டில் நடந்தது. செங்கல்பட்டு நகர காங்கிரஸ் சார்பில் லடாக் எல்லையில் இறந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகில் நேற்று நடந்தது. செங்கல்பட்டு நகர காங்ரஸ் தலைவர் ஜெ.பாஸ்கர் தலைமை வகித்தார்.