புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக்கில் சாதிக்க ஒவ்வொரு விளையாட்டுக்கும் சச்சின் ெடண்டுல்கர் போன்றவர்கள் மட்டுமல்ல, அவரைப் போல் திறமையை வெளிப்படுத்த சரியான தளமும் தேவை என்று இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவருமான அடில் சுமரிவாலா தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு ‘ஸ்போர்ட்ஸ் ஃபார் ஆல்’ ஏற்பாடு செய்திருந்த இணையதள உரையாடலில், அடில் சுமரிவாலா, பணம் ஒரு நாட்டுக்காக பதக்கங்களை வாங்க உதவலாம், உதவாமல் போகலாம். ஆனால் பதக்கம் கைப்பற்றக் கூடிய சூழல்தான் நீண்டகாலத் தேவை. அதற்கு கீழ் மட்டத்தில் இருந்து உறுதியான அடிப்படை கட்டமைப்புகள் தான் முக்கிய தேவையாகும்.