திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கோயிலில் ₹300க்கான தரிசன டிக்கெட் கூடுதலாக 3 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த 11ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ₹300 சிறப்பு தரிசனத்திற்காக வரும் 30ம் தேதி வரை தினசரி 6 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தினசரி சர்வ தரிசனத்திலும் 3,750 பேர் அனுமதிக்கப்படுகிறது.