ஹைதராபாத் : காஷ்மீரில் தால் ஏரியை கடந்த 2 வருடங்களாக தூய்மை செய்து வரும் 7 வயது சிறுமியின் கதை பள்ளி பாடத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி மிகவும் பிரபலமானது. சுற்றுலாத்தளமாகவும் விளங்குகிறது. தால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு குப்பைகளை வீசி அசுத்தம் செய்கின்றனர். இதனால் ஏரியின் அழகு பாதிக்கப்பட்டதை பார்த்து வருத்தமடைந்த 7 வயது சிறுமி ஜன்னத், தனது தந்தையுடன் இணைந்து ஏரியை சுத்தப்படுத்தி வருகிறார். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதற்காக அவர் இந்த சேவையில் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். படகு ஒன்றில் ஏரியில் செல்லும் அவர், குப்பை கூளங்களை வலைகளை கொண்டு வெளியே எடுத்து சுத்தம் செய்கிறார்.