திருவொற்றியூர்: எண்ணூர் அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரின் பின் சீட்டில் பாலிகீட்ஸ் என்ற புழுக்களை மண்சட்டி மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த புழுக்களை பறிமுதல் செய்து மாதர்பாக்கம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.