வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் அருகே அரசன் கழனியில் கடந்த 19ம் தேதி பட்டாக் கத்தியால் கேக் வெட்டி ரவுடிகள் பிறந்தநாள் விழா கொண்டாடியது சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்களில், ஐந்து பேரை கைது செய்தனர். இந்நிலையில், அதேபாணியில் பெரும்பாக்கம் எழில் நகரிலும் கடந்த 5ம் தேதி 20க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி ஒருவருடைய பிறந்த நாளை கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.