வாஷிங்டன்: கொரோனா நோய் தொற்றை கையாளுவதில் உலகளாவிய ஒத்துழைப்பு இல்லை என ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் கூறியதாவது:
கொரோனா சீனாவில் தொடங்கியது. ஐரோப்பாவிற்கு சென்றது. பின்னர் வடஅமெரிக்கா மற்றும் தற்போது தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிலும் பரவியுள்ளது. தற்போது சிலர் கொரோனாவின் இரண்டாவது அலை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரும் என்கின்றனர். இதுவரை கொரோனவை கையாளுவதில் நாடுகளிடையே ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை. கொரோனா நோய் தொற்றை நாடுகள் ஒன்றிணைந்து எதிர்த்து போராடுவதோடு மட்டுமல்லாமல், சிகிச்சை முறைகள், சோதனைகள், தடுப்பூசிகள் ஆகியவற்றிலும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்பதை நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.