கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

புழல்: சோழவரம் போலீசார் நேற்று மாலை சோழவரம் அடுத்த சோத்துப்பெரும்பேடு ஜங்ஷனில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஞாயிறு கிராமத்திலிருந்து பைக்கில் 2 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி முயன்றபோது நிற்காமல் சென்றனர். உடனே போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.  அப்போது, அவர்கள் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். விசாரணையில், சென்னை கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரபிக் (25), முகிலன் (24) என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, அவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்கினார்கள் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: