புழல்: சோழவரம் போலீசார் நேற்று மாலை சோழவரம் அடுத்த சோத்துப்பெரும்பேடு ஜங்ஷனில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஞாயிறு கிராமத்திலிருந்து பைக்கில் 2 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி முயன்றபோது நிற்காமல் சென்றனர். உடனே போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.