ஆவடி: ஆவடி அடுத்த வீராபுரம், வினோ நகர் மெயின் ரோட்டில் உள்ள மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக நேற்று முன்தினம் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் மளிகை கடைக்கு சென்றனர். கடை மற்றும் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது. அதன் எடை 400 கிலோ. அதன் மதிப்பு ₹3 லட்சம். விசாரணையில், மளிகைக்கடை உரிமையாளர் ஆறுமுகசாமி (44) குட்காவை கடையில் பதுக்கிவைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்துள்ளது ெதரியவந்தது.