பெங்களூரு: பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள ஐ.எம்.ஏ நிதி நிறுவனம் ரூ 1600 கோடிக்கு அதிகமாக பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த முறைகேட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான விஜய சங்கருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து நடத்திய விசாரணையில் அவர் ரூ 1.5 கோடி லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. தொடர்ந்து வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது.