ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதியில் தொடர்ந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணடிக்கப்படுகிறது. ராஜபாளையம் நகரில் 42 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் பத்து நாட்களுக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக பிரித்து நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் மழை இல்லாமலும், அதிகளவு காற்று வீசி வருவதால் குடிநீர் தேக்கத்தில் உள்ள தண்ணீர் காற்றோடு கலந்து வற்றும் சூழ்நிலையிலிருந்து வருகிறது. இந்நிலையில் நகர் பகுதியில் உள்ள அனைத்து குடிநீர் வால்வுகள் சேதமடைந்தும் பல லட்சம் குடிநீர் சாலையில் வீணாக ஓடுகிறது.