தூத்துக்குடியில் 2 வியாபாரிகள் உயிரிழந்ததை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கி 2 வியாபாரிகள் உயிரிழந்ததை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து தந்தை, மகன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டி சிறையில்  அடைக்கப்பட்டிருந்த 2 பேரும் நேற்று இரவு உயிரிழந்தனர். தந்தை,  மகன் 2 பேரும் உயிரிழந்ததைக் கண்டித்து சாத்தான்குளத்தில் அனைத்து  கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. சிறையில் தந்தை, மகன் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு வியாபாரிகள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: