புதுடெல்லி: பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படும், ‘மாதிரி கிராமம் திட்டம்’ தோல்வி அடைந்துள்ளதாக பொது ஆய்வு குழு தெரிவித்துள்ளது. மோடி முதல்முறையாக 2014ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு எம்பி.யும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் அடிப்படை வசதிகளை பெருக்கி, மாதிரி கிராமமாக மாற்ற உத்தரவிடப்பட்டது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் கபூர் தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய பொது ஆய்வுக்குழுவை மத்திய அரசு நியமித்தது.