லண்டன்: இங்கிலாந்தில் ரீடிங் நகரில் உள்ள போர்பரி பூங்கா அருகே நேற்று முன்தினம் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது, தீவிரவாதி ஒருவன் புகுந்து கூட்டத்தில் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தேம்ஸ் காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக லிபியாவை சேர்ந்த 25 வயது இளைஞனை கைது செய்தனர். இதனிடையே, இனவெறிக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.